FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Sunday, January 24, 2010

பென்ஷன் -- நிர்வாகம் விளக்கம்

24.01.2010 : Ministry of Communication & IT, DoT, New Delhi vide No: 40-12/2007-Pen.(T) dated January 5, clarifies on the subject of “ Pension liability of BSNL towards pensionary benefits including Family Pension to its employees” saying

“ 2.. In this context, it is hereby clarified that the above-said limit of 60% is for normal funding. This does not in any way distract from the fact that the ultimate liability towards pensionary benefits including family pension to the BSNL employees (excepting those recruited after 01.10.2000), as per sub-rule 21 of Rule 37-A of CCS (Pension) Rules, 1972, lies with the Government of India. If BSNL, for any reason, is not able to contribute to the extent prescribed in Para 1 above, the Government of India will still pay the admissible pensionary benefits including Family Pension to BSNL employees (Excepting those recruited after 01.10.2000) (From www.fnto.org)

ஜனவரி 5ம் தேதி DOT பென்ஷன் பற்றி ஒரு விளக்கமளித்துள்ளது.
அதாவது BSNL பென்ஷன் நிதிக்காக 60% அளிக்க வேண்டும் என்பது சாதாரண நடைமுறைதான் என்றும், இந்த 60% என்னும் நிபந்தனை பி எஸ் என் எல் ஊழியர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பென்ஷன் அளிப்பதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்றும் ஒருவேளை பி எஸ் என் எல் இந்த 60% நிதியை அளிக்க முடியாத நிலைக்குச் சென்றாலும் Sub rule 21 of Rule 37-A of CCS (Pension) Rules 1972ன்படி 2000ல் DOT யிலிருந்து BSNLல் இணைந்த ஊழியர்களுக்கு ஓய்வூதியமும், அவர்கள் குடும்பத்தாருக்கு குடும்ப ஓய்வூதியமும் அளிப்பது இந்திய மத்திய அரசின் பொறுப்பு என்றும் அதில் தெளிவு படுத்தப் பட்டுள்ளது.
இது ஞாபக சக்தி உள்ளவர்களுக்கு:-- இந்த 37(A) பிரிவு BSNL ஆக மாறியபோது அன்று நிர்வாகத்துடன் பேசும் வாய்ப்பைப் பெற்றிருந்த FNTO, NFTE, BMS சங்கங்களால் வாதாடிப் பெற்ற நன்மை என்பதையும் அதனாலேயே இன்று இத்தகைய உறுதிகளைப் பெற முடிகின்றதென்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அன்றிருந்த சங்கங்கள் ஊழியர் நலனையே ப்ரதானமாகக் கொண்டு ஊழியர் பிரச்சினைகளில் இப்படித்தான் செயல்படவேண்டும் என்று திட்டம் தீட்டி வெற்றிகள் கண்டன. ஆனால் அது அந்தக் காலம். இப்போதோ எப்படியாவது பிரச்சினைகள் தீர்ந்தால் போதும் என்று நினைக்கின்றவர்களிடம் ஆட்சியும் அதிகாரமும். Food corporation Of Indiaவிலும் pay anamoly பிரச்சினை. அங்கு அவர்களால் ஜூனியரைக் காட்டிலும் ஸீனியர் குறைவாகச் சம்பளம் பெறும் நிலையில் ஸூனியர்களுக்கு ஜூனியர்களின் சம்பள விகிதம் அளிக்கப் பட வேண்டும் என்ற உத்தரவை சங்கங்களால் பெற முடிந்திருக்கிறது. இங்கோ? அதை special pay என்று ஏதோ குடும்பக் கட்டுப்பாட்டிற்குப் பெறுவதைப் போல்தான் பெற முடிந்திருக்கிறது. இது இந்தக் காலம். நிர்வாகத்தைத் தங்கள் வாதத் திறமைகளால் வென்று நல்ல முடிவுகளைப் பெற்றது அந்தக் காலம். நிர்வாகத்தின் உத்தரவுகளை உடன்பாடு என்று ஊழியரை நம்ப வைக்க முயல்வது இந்தக் காலம்.

No comments:

Post a Comment