FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Saturday, January 28, 2012

Well done KKD TRA Team ! – சபாஷ் சரியான போட்டி !


இன்றைய முகப்புக் குறள்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.
செய்யக் கூடாத செயல்களைச் செய்வதாலும் கெடுதல் நேரும், செய்யக் கூடிய செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் கெடுதல் நேரும் என்று திருவள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொல்லியிருக் கிறார் – BSNL-ஐ நினைத்துதான் போலும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் நட்டத்தில் சிக்கித்  தவித்துக் கொண்டிருக்கும் BSNL நிறுவனத்தின் நிதிநிலையைச் சீராக்கு வதற்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று ஒவ்வொரு தொழிலாளியும் அதிகாரியும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தருணம் இது. வருவாயைப் பெருக்குவதிலும் வராக் கடன்களை வசூலிப்பதிலும் முனைப்போடு செயலாற்றும் அதே வேளையில் வெட்டிச் செலவுகளைக் குறைப்பதிலும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பதிலும் ஒவ்வொருவரும் அதீத அக்கறையோடு செயல்பட்டால் தான் BSNL-லுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி யிலிருந்து மீளமுடியும். BSNL-ஐக் காப்போம் என்ற வெற்றுக் கோஷங்கள் மட்டும் கவைக்கு உதவாது.

அந்த வகையில், திரு சு.இராமகிருஷ்ணன் DGM(F)/KKD தலைமையிலான TRA Team-ஐ எவ்வளவு பாராட்டினாலும் தகும். 8 வருடங்களாக அஞ்சல் துறையிடமிருந்து வாராதிருந்த 60 லட்சம் ரூபாயை வசூலித்ததாகட்டும் அல்லது தொலைபேசி பில் அச்சடிப்புச் செலவைக் குறைத்து வருடத்திற்கு 3 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்தியதாகட்டும்சபாஷ் சரியான போட்டி.

இதனால், காரைக்குடி என்றாலே மோசம் என்று மாநில நிர்வாகம் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்த நிலை சற்றே மாறி, இப்போது தமிழ் மாநிலமே காரைக்குடியைத் திரும்பிப் பார்க்கக் கூடிய நிலை உருவாகி, காரைக்குடி SSA-வின் மவுசு கூடியுள்ளது.

இதற்குக் காரணகர்த்தர்களான KKD TRA Team, குறிப்பாக    திரு சு.இராமகிருஷ்ணன் DGM(F)/KKD,
திரு .சந்திரசேகரன் CAO(TR),
திரு மு.வாவேர்துரை AO(Billing) மற்றும்
திரு R.மாரிமுத்து CLR
ஆகியோர் பாராட்டுதலுக்குரியவர்கள்.
      
     இதேபோல, போன் மெக்கானிக் தோழர்கள் மூலமாக தொலைபேசி பில் பட்டுவாடா செய்யலாமென்ற BSNL கார்ப்பரேட் அலுவலக உத்தரவைச் செயல்படுத்துவதன் மூலமாகவும் வருடத்திற்கு 6 லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும். தவிரவும், அஞ்சலகங்கள் மூலம் வசூலிக்கப்படும் தொலைபேசி பில் ஒவ்வொன்றுக்கும் கமிஷன் 5 ரூபாய் என்றிருந்ததை தற்போது 10 ரூபாயாக உயர்த்தியிருப்பதனால் அந்தச்  செலவும் இரட்டிப்பாகவுள்ளது. போன் மெக்கானிக் தோழர்கள் மூலமாக தொலைபேசி பில் வசூல் செய்யலாமென்ற உத்தரவையும் செயல்படுத்துவதன் மூலமாக வருடத்திற்கு பல லட்சம் ரூபாயை மிச்சப்படுத்த முடியும். அது மட்டுமின்றி, இந்த வேலைகளை விரும்பி ஏற்றுக் கொள்ளும் தோழர்களுக்கு ஊக்க ஊதியமும் வழங்கப் படுகிறது.

இந்த வகையில், DGM(F)/KKD அவர்களுடைய நல்லெண்ண நடவடிக்கைகளை நாமும் ஆதரிப்போம். BSNL-ஐக் காப்போம் !

Friday, January 27, 2012

Rs. 1.8 Crore allotted for Cyclone/Flood Relief by BSNL C.O.


புயல்/வெள்ள நிவாரணம் வழங்க ரூ.1.8 கோடி ஒதுக்கீடு

சமீபத்தியதானேபுயல் ஏற்படுத்திய பேரழிவின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைத்தொடர்பு மாவட்டங்களைச் சேர்ந்த BSNL தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி FNTO தமிழ்மாநிலச் சங்கம் CGM மற்றும் GM(Finance) ஆகியோரைச் சந்தித்து கடிதம் கொடுத்து விரிவாக விவாதித்ததைத் தொடர்ந்து மாநில நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்ததின் பயனாக, தற்போது BSNL கார்ப்பரேட் அலுவலகம் 1.8 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு, கடலூர் மற்றும் புதுச்சேரி SSA தொழிலாளர்களுக்கு புயல்/வெள்ள நிவாரண முன்பணம் வழங்கப் படும்.

Rs. 1.8 Crore allotted for Cyclone/Flood Relief

Tamil Nadu Circle Union of NUBSNLW/FNTO had already taken up the case for grant of Relief to the BSNL Workers, belonging to the Cuddalore and Puducherry Telecom. Districts, who are the victims of the recent “Thane” cyclone. In response to the efforts taken by Tamil Nadu Circle Administration, BSNL corporate office has sanctioned Rs. 1.8 Crore towards grant of Cyclone/Flood Advance to the workers of Cuddalore and Puducherry SSAs.

Monday, January 16, 2012

இனிய பொங்கல் வாழ்த்துகள் - Happy Pongal



இஞ்சியுடன் மஞ்சளும் இனிதான செங்கரும்பும்
விஞ்சி மிகச்சிறந்து விளைந்திட்ட செந்நெல்லும்
அறுவடை செய்திங்கு அகமகிழும் உழவர்
ஆதி கதிரவனை அருமைக் கால்நடையை
வணங்கி மிகப்பணிந்து வாழ்த்திப் பொங்கலிட்டு
தம்நன்றி தெரிவிக்கும் அறுவடைப் பெருநாளில்
தரணியெல்லாம் கொண்டாடும் தமிழர் திருநாளில்
பொங்குக மங்களம் எங்கணும் பூமியில்
தங்குக மகிழ்ச்சியும் மனநிறைவும் தங்களில்
என்றுமிக அன்போடும் ஆசைகள் பலவோடும்
உள்ளங் கனிந்துமிக வாழ்த்துகிறேன் உங்களையே !

அனைவருக்கும்
NUBSNLW - FNTO தமிழ் மாநிலச் சங்கத்தின்
தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் !!

Monday, January 9, 2012

தேவையில்லை வீண் குழப்பம் ! No room for confusion !


தங்களுடைய உறுப்பினர்களின் பிரச்சினைகளை  நிர்வாகத்துடன் பேசித் தீர்த்துக் கொள்வதற்கான உரிமையை இந்திய தொழிற்சங்கங்கள் சட்டம் (Indian Trade Union Act) பதிவுசெய்யப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு வழங்கியிருக்கிறது.
தொழில் அமைதியைப் பேணும் வகையில், அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் உறுப்பினர்களுடைய பிரச்சினைகளைப் பேசித் தீர்ப்பதற்கு வசதியாக அங்கீகரிக்கப் படாத சங்கங்களின் பிரதிநிதிகளைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சந்திப்பதற்கு (informal meetings) தடையேதும் இல்லை என்று ஏற்கனவே பல உத்தரவுகள் மூலம் BSNL கார்ப்பரேட் நிர்வாகமும் தெளிவுபடுத்தியுள்ளது.  
ஆங்காங்கே ஓரிரு அடமண்டு அதிகாரிகளைத் தவிர பெரும்பாலான மாவட்ட, மாநில, கார்ப்பரேட் அலுவலக அதிகாரிகளை - CMD உட்பட - அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் பிரதிநிதிகள் அவ்வப்போது சந்தித்து பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விவாதித்து வருகிறார்கள்.
தற்போது 5-1-2012 தேதியிட்ட உத்தரவில் மீண்டும் அதையே வலியுறுத்தியுள்ள நிர்வாகம், கூடவே 15% வாக்குகள் என்றும் குறுக்குச்சால் ஓட்டியிருக்கிறது. இது இரண்டாவது அங்கீகாரமோ அல்லது தொழிற்சங்க உரிமையோ அல்ல. மாறாக, யாரையோ தற்காலிகமாகத் திருப்திப் படுத்துவதற்காக சில குட்டி அதிகாரிகள் செய்த சித்துவேலை போலவே தோன்றுகிறது. இது தொழிலாளர்களிடம் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தவும், குழம்பிய குட்டையில் சிலர் மீன்பிடிக்கவும் உதவுமேயன்றி, வேறு பயனேதுமில்லை.
முதல் சரிபார்ப்புத் தேர்தலிலிருந்தே, BSNL-க்குப் பொருந்தாத Code of Discipline-ஐ மாற்ற வேண்டுமென்றும், BSNL-க்கென்று புதிய அங்கீகார விதிகளை உருவாக்க வேண்டுமென்றும், பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் குறைந்தபட்ச உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்றும் கோரி FNTO போராடி வருகிறது. ஆதியில் இதை எதிர்த்த சில சங்கங்கள் கூட தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்கின்றன. இது சம்பந்தமாக கேரள உயர்நீதிமன்றத்தில் FNTO தொடர்ந்துள்ள வழக்கு நிலுவையிலுள்ளது. மேலும், இடைக்கால உத்தரவாக, 5-வது தேர்தலுக்குப் பிறகு வழங்கப்படும் அங்கீகாரமானது இந்த வழக்கின் முடிவைப் பொறுத்தே அமையும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட சங்கம் கூட தனது கருத்தை மாற்றிக் கொண்டு, விகிதாச்சார பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து விட்டது. எனவே, பிற சங்கங்கள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலையில், FNTO தனித்து நின்று 5-வது தேர்தலில் 8 சத வாக்குகளைப் பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, FNTO-வுக்கும் அங்கீகாரம், குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி FNTO-வின் பொதுச் செயலர்(பொறுப்பு) தோழர் K.ஜெயப்பிரகாஷ் CMD-யைச் சந்தித்து விவாதித்துள்ளார். நமது கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று CMD-யும், Director(HR), PGM(SR) ஆகியோரும் உறுதியளித்துள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில், குறைந்தபட்ச தொழிற்சங்க உரிமைகள் வழங்குவதற்குப் பதிலாக, ”எலும்புத் துண்டுசலுகைகள் வழங்க எத்தனிக்கும் நிர்வாகத்தின் போக்கு  எதேச்சாதிகாரமானது, கண்டிக்கத் தக்கது. இந்த இழிநிலை மாறும், மாற்றுவோம்.
தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும்”.
ஆகவே, தோழர்களே, தெளிவுடன் இருப்போம், விழிப்புடன் இருப்போம். தேவையில்லை வீண் குழப்பம் !

Friday, January 6, 2012

பத்தாண்டு சேவை முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம்

அரசுத் துறையில் பத்தாண்டு சேவை முடித்தவர்களுக்கும் முழு ஓய்வூதியம் கிடைக்கும். குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3500. இது BSNL தொழிலாளர்களுக்கும் பொருந்தும் என DOT தெளிவுபடுத்தியிருக்கிறது.
As per para 6 of the OM of DOP&T No. 38/80/2008-P&PW(A) (Pt.II) dated 08/06/2011, full pension is admissible for those Government servants who retire after completing the qualifying service of not less than ten years, subject to minimum of Rs.3500 p.m.
DOT clarifies this aspect vide letter No. A-11013/33/2011-Abs.Cell dated 28/11/2011 which is endorsed by BSNL vide No. 40-33/2011-Pen(B) dated 04/01/2012.
Admissibility of Full Pension After 10 Yrs

புயல்/வெள்ள நிவாரணம் வழங்க FNTO கோரிக்கை


சமீபத்திய ”தானே” புயல் ஏற்படுத்திய பேரழிவின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பெரும்பாலான மக்கள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். புயலாலும் வெள்ளத்தாலும் வீடுகளையும் உடமைகளையும் இழந்து சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆட்பட்டிருக்கும் இம்மக்களுக்கு மத்திய மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. இந்த இயற்கைச் சீற்றங்களால் BSNL தொழிலாளர்களுக்கும் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, பாதிக்கப் பட்டுள்ள தஞ்சாவூர், கும்பகோணம், கடலூர் மற்றும் புதுச்சேரி தொலைத்தொடர்பு மாவட்டங்களைச் சேர்ந்த BSNL தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் – மத்திய நல நிதியத்திலிருந்து (Central Welfare Fund) நிதியுதவி, சிறப்பு நல நிதியத்திலிருந்து (Special Welfare Fund) வட்டியில்லாக் கடன் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் வட்டியில்லா முன்பணம் (Interest free Advance for Natural Calamities) – வழங்க வலியுறுத்தி FNTO தமிழ்மாநிலச் சங்கம் CGM மற்றும் GM(Finance) ஆகியோரைச் சந்தித்து கடிதம் கொடுத்து விரிவாக விவாதித்திருக்கிறது. மாநில நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறது.
Fnto Thane