FNTO CHQ

FNTO CHQ
News from Headquarters
தேசிய சங்க செய்திகளையும் தொலைதொடர்புத் துறை செய்திகளையும் இயன்ற அளவு தமிழில் அளிக்க காரைக்குடி மாவட்டத்திலிருந்து ஒலிக்கும் முரசு இது.

Friday, December 21, 2018

பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 12000 கோடி கடன் வாங்கும் BSNL


சேவைகளின் மூலம் கிடைக்கும் வருமானம் குறைந்து கொண்டே வருவதால், பராமரிப்புச் செலவுகளை சமாளிப்பதற்காக BSNL நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா உள்ளிட்ட சில பொதுத்துறை வங்கிகளிடமிருந்து 12000 கோடி ரூபாய் கடன் வாங்குவதாகத் தெரிகிறது.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், தொலைத்தொடர்புத் துறை (DOT) யின் அனுமதிக் கடிதம் (Letter of comfort) இல்லாமலேயே BSNL நிறுவனம் இந்த கடனை வாங்குகிறது. சாதாரணமாக, பொதுத்துறை நிறுவனங்கள் குறைந்த வட்டியில் வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்கு அந்தந்த அமைச்சரகங்கள் (Nodal ministries) அனுமதிக் கடிதம் வழங்கும். ஆனால், BSNL நிறுவனத்துக்கு மேற்படி அனுமதிக் கடிதம் DOT-யால் வழங்கப் படாததால், வணிகரீதியிலான அதிகபட்ச வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு BSNL நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளது.

ஏற்கனவே BSNL-க்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய வகையில் 2400 கோடி ரூபாய் DOT-யிட மிருந்து வரவேண்டியுள்ளது. அந்தப் பணத்தை DOT கொடுத்தாலாவது, BSNL நிறுவனத்துக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியிலிருந்து தற்காலிகமாகவாவது மீண்டுவர வாய்ப்பு கிடைக்கும். அதற்கும் வழியில்லை.

கடந்த சில வருடங்களாக குறைந்துகொண்டே வந்த BSNL-ன் நட்டம், சென்ற நிதியாண்டில் (2017-18-ல்) அதற்கும் முந்தைய ஆண்டைவிட இருமடங்காக (7992 கோடியாக) அதிகரித்தது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.

Monday, November 26, 2018

கவன ஈர்ப்பு போராட்டம் - Agitation Programs

FNTO, BTEU(BMS) மற்றும் TOABSNL ஆகிய சங்கங்கள் கூட்டாக சேர்ந்து அடியிற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டங்களை அறிவித்துள்ளன.

26/11/2018 to 30/11/2018கருப்பு பேட்ஜ் அணிதல் மற்றும் தினசரி மாலை 6 மணிக்கு கார்ப்பரேட் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி நினைவூட்டுதல்.
01/12/2018 – ஆர்ப்பாட்டம்
(CHQ மற்றும் மாநில, மாவட்ட தலைமையிடங்களில்)

மத்திய அரசே! BSNL நிர்வாகமே!

1.   3-வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்து. Non-Executive-களுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை களை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்து, அலவன்ஸ்களுடன் அமல்படுத்து. 2-வது ஊதியக்குழுவால் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படாத பிரச்சினைகளையும் தீர்த்துவை.

2.  01/01/2017-க்கு முன் ஓய்வுபெற்ற BSNL ஊழியர்களின்    ஓய்வூதியத்தை உடனடியாக மாற்றியமை.

3.     ஓய்வூதிய பங்களிப்பை விதிப்படி முறையாகக் கணக்கீடு செய்.

4.     BSNL-க்கு விருப்பம் தராத அதிகாரிகளை திருப்பி அனுப்பு.

5.     பொருளாதார உதவி அளிப்பதோடு, 4G அலைக்கற்றை ஒதுக்கி,  BSNL வளர்ச்சிக்கு உடனடி நடவடிக்கை எடு.

Monday, November 19, 2018

Demands of Non-Executive Unions


1) Rs.20,000/- as minimum pay to Non-Executives.

2) Ensure fitment benefit of 15% to Non-Executives.

3) 5% increase on promotion / upgradation of pay scale.

4) Upgrade the pay scale of Senior TOAs as per the decision of the then JCM (DC) consequent on the V CPC reports.

5) Cancel the wrong clarification given by the BSNL CO for the revision of pay scale of TTAs from 4500 to 5000 from 01.10.2000. Either fix the pay from 01.10.2000 under FR 22 I (a) (i) or grant NEPP I after completion of 4 years instead of 7 years.

6) Revise HRA, Transport Allowance conveyance allowance and other allowances at par with Central Govt. Employees.

7) Reconstitute wage negotiation committee for Non-Executives involving all the applicant unions as was done for wage revision from 01.10.2000, as the present recognized unions are not interested in wage negotiation across the table to be completed in time.

8) Revision of pension of BSNL absorbed DOT employees provisionally pending settlement of pay scales from 01.01.2017 by giving 15% fitment benefit.

9) Direct engagement of contract labourers in BSNL instead of through contractors and disbursement of their wages by the BSNL Management directly to avoid malpractices by contractors and other intermediaries.

10) Absorption of left out casual labourers (as on 01.10.2000) if necessary by relaxing rules & regulations.

Monday, November 5, 2018

Happy Diwali - தீபாவளி வாழ்த்துகள்










மையிருள் கலையட்டும்
பொய்யிருள் மறையட்டும்
தீபவொளி திசையெட்டும்
பரவிச் சிறக்கட்டும்.
அனைவருக்கும் இனிய
தீபாவளி நல்வாழ்த்துகள்

Wednesday, October 24, 2018

5th AIC at Hyderabad

5th All India Conference of our union NUBSNLW (FNTO) will be held at Hyderabad on 3rd & 4th February-2019. All the CHQ office bearers ,Circle Secretaries , District Secretaries and Branch Secretaries are requested to conduct the meetings to elect Delegates and book the tickets along with you. It is also requested to forward the list of Delegates to CHQ / Reception committee Hyderabad –K. Jayaprakash, General Secretary 

Friday, September 28, 2018

IDA increases from 01/10/2018

1-10-2018 முதல் கிராக்கிப்படி (IDA) 7.6 சதவீதம் உயர்ந்து மொத்தம் 135.6 சதவீதமாக மாறியுள்ளது.


IDA payable with effect from 01/10/2018 will be 135.6%, i.e. an increase by 7.6%.

Rejointer to NFTE’s Vellore Website

1)  No Comments
2)  No Comments
3)  No Comments

4)  It may be noted that all along in CPCs, the unions were demanding minimum pay only. For the need based minimum wages, one day strike was organized on 19.09.1968 by the then NFPTE which includes the elements of left forces also.

In the Second wage revision from 01.01.2007 also, the then one & only recognized union, BSNLEU has demanded the minimum pay of Rs.14,000/-. Based on the minimum pay only, other pay scales can be devised. That is why, FNTO was very particular in fixing the minimum pay of  Rs.20,000/- for NE-1. Based on this, the other pay scales from NE-2 to NE-12 have been devised in such a way that the fitment benefit of 15% is ensured even to the new recruits from 01.01.2017  which should be inherent in the starting pay of the scale of respective cadres.

The multiplication factor has no role to devise the pay scale in BSNL as it differs from scale to scale for central Govt. employees due to grade pay. In the Central pay scales, each pay band has four or five grade pays and the multiplication factors differ from pay scales to pay  scale due to grade pay. BSNL has no such grade pay and therefore we should not copy the multiplication factor of  central pay scales. We should devise our pay scales to ensure 15% increase to all employees including post 2017 recruits. This is what FNTO has done in its proposals and FNTO is not new to give demand and negotiate for pay scales. We were doing it right from the 3rd CPC to 5th CPC and two earlier wage revision in BSNL. In fact, the demand for 2nd wage revision was prepared by the FNTO, the then ally of BSNLEU, at the request  of Sri.V.A.N. Namboodri.

5) FNTO has not made any criticism that the CMD has recommended 15% fitment benefit to Executives and 11.3% to Non-Executives. Only these two recognized unions are telling like this. In fact, the point of 15% fitment benefit has not been discussed by the recognized unions and saying that the DOT is suggesting 0% to 5%. They should ensure 15% fitment benefit, as is proposed to Executives, to Non-Executives also as there cannot be any discrimination between these two categories. Without discussing this point, accepting the BSNL proposed pay scales is unfortunate.

6) The minimum of the pay scales for ATT, Sr.TOA and TTA cadres are not ensuring the 15% fitment benefit to those appointed on or after 01.01.2017 as per their calculation itself. According to their calculation, it ranges from 11.12% to 11.55% only. However, these recognized unions have already accepted the BSNL proposed pay scales irrespective of the percentage of benefit for post 2017 appointees. They have justified it quoting 01.01.2007 pay scales, which have been recommended and agreement signed by the then recognized union BSNLEU.

It is unfortunate that these two unions are not interested in getting upgraded scale recommended by the then JCM (DC) of DOT consequent on the V CPC recommendation to the Sr.TOAs. That demand was notified by the FNTO and won. But the BSNLEU surrendered the up gradation in BSNL.

7)  No Comments

Friday, August 17, 2018

வாஜ்பாயி மறைந்தார் – நமது அஞ்சலி















பாரத திருநாட்டின் பண்பட்ட அரசியல்வாதி
அருமையான கவிஞர் ஆற்றல்மிக்க பேச்சாளர்
வலதுசாரி இயக்கத்தின் மிதவாத தலைவர்
அணுகுண்டை வெடித்து அகிலமே அதிரவைத்தவர்
ஏவுகணை நாயகன் விஞ்ஞானி அப்துல்கலாமை
இந்திய ஜனாதிபதியாக்கி பெருமை சேர்த்தவர்
முன்னாள் பாரதப் பிரதமர்
அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் மறைவுக்கு
நமது ஆழ்ந்த இரங்கல்கள்.

Wednesday, August 8, 2018

கலைஞர் மறைந்தார் – கண்ணீர் அஞ்சலி
















இந்திய அரசியலின் முதுபெரும் தலைவர்
சுயமரியாதை இயக்கத்தின் சுடர் விளக்கு
தமிழ் இனத்தின் தன்மானமிக்க போராளி
இயல் இசை நாடகம் என்னும்
முத்தமிழையும் கற்றறிந்த வித்தகர்
பதின்மூன்று முறை சட்டப்பேரவை உறுப்பினர்
ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சர்
தொழிலாளர்களின் ஒப்பற்ற தோழர்
டாக்டர் கலைஞர் மு.கருணநிதி
அவர்களின் மறைவுக்கு
நமது கொடிதாழ்த்திய அஞ்சலியை
காணிக்கையாக்குகிறோம்.

Tuesday, May 22, 2018

ஓய்வூதியர்களின் குறை தீர்க்கும் பிரிவு – Pensioners Grievance Redressal Cell


BSNL-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவென்று ஒரு பிரிவு (Grievance Redressal Cell for retired employees) புதுடெல்லி BSNL தலைமையகத்தில் செயல்படத் துவங்கியுள்ளது.
தொடர்பு கொள்ள:

தொலைபேசி எண்: 011-23766063

ஃபேக்ஸ் எண்: 011-23734338

இமெயில்: bsnlretiredemp@gmail.com

Click here for orders

Tuesday, May 1, 2018

May Day Greetings - மே தின வாழ்த்துகள்

























அனைத்து தொழிலாளர்களுக்கும்

புரட்சிகரமான மே தின வீரவாழ்த்துகள்.

Revolutionary Greetings to All Workers
on this occasion of May Day.

Saturday, April 14, 2018

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் - HAPPY TAMIL NEW YEAR


இன்று விளம்பி வருடம்
இனிதே பிறந்தது.
இந்தப் புத்தாண்டில் - 
புதுமைகள் தொடரட்டும்,
மாற்றங்கள் மலரட்டும்,
எல்லோர் வாழ்விலும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்.
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

Thursday, March 8, 2018

தமிழ்நாடு CGM உடன் புதிய நிர்வாகிகள் சந்திப்பு

புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட தமிழ்மாநில நிர்வாகிகள் கடந்த 17/02/2018 அன்று சென்னையில் தமிழ்மாநில CGMT திரு R.மார்ஷல் ஆண்டனி லியோ அவர்களையும் GM(HR) உள்ளிட்ட இதர அதிகாரிகளையும் சந்தித்தனர். புதிய மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன் CGMT-க்கு சால்வை அணிவித்தார்.

















இந்தச் சந்திப்பில், மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம், சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளர் தோழர் S.லிங்கமூர்த்தி, மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் D.சந்திரசேகரன், மாநிலச் செயலாளர் தோழர் R.ஜெயபாலன், மாநில இணைச் செயலாளர்கள் தோழர் G.முத்துக்குமரன் மற்றும் தோழர் M.நயினார், மாநில உதவிச் செயலாளர் தோழர் V.V.S., மாநிலப் பொருளாளர் தோழர் S.பார்த்திபன், மாநில உதவிப் பொருளாளர் தோழர் P.K.கேசவன் மற்றும் விழுப்புரம் தோழர் D.ராஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, March 2, 2018

மதுரை மாநாட்டு தீர்மானங்கள்


FNTO-வின்  4-வது தமிழ் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.    BSNL தொழிலாளர்களின் ஊதிய மாற்றம்:
பொதுத்துறைஅதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் குறித்து 3-வது ஊதிய மாற்றக்குழு அளித்த பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு உத்தரவு வெளியிட்டதின் அடிப்படையில் BSNL அதிகாரிகளுக்கான ஊதிய மாற்றம் நிர்வாகத்தால் பரிந்துரைக்கப்பட்டு DOT-யின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. ஆனால், BSNL தொழிலாளர்களுக்கு ஊதிய மாற்றம் அளிப்பதற்கு நிர்வாகமும் ஊழியர் தரப்பும் இணைந்த ஒரு குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுசெய்ய வேண்டும். 26/12/2016 அன்றே நிர்வாகத்தின் சார்பில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட பிறகு, ஒரு வருடத்திற்கு மேலாகியும் கூட அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் இன்னும் ஊழியர் தரப்பு பிரதிநிதிகளை நியமிக்காமல் இழுத்தடிப்பது, ஊதிய மாற்றம் குறித்த அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அக்கறையின்மையையே காட்டுகிறது. எனவே, அனைத்து சங்கங்களின் பொதுச்செயலாளர்களையும் உள்ளடக்கிய குழுவை உடனடியாக அமைத்து ஊதிய மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு BSNL நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

2.    துணை டவர் கார்ப்பரேஷன்:
நாடாளுமன்றத்தில் BSNL-ன் துணை டவர் கார்ப்பரேஷன் குறித்த கேள்விக்கு பதிலளித்த தகவல்தொடர்பு அமைச்சர், துணை டவர் கார்ப்பரேஷன் அமைப்பதை BSNL தொழிற்சங்கங்கள் எதிர்க்கவில்லை என்று கூறியுள்ள போது, அதிகாரிகளையும் தொழிலாளர்களையும் வேலைநிறுத்தம் செய்யத் தூண்டி தொழில் அமைதியைக் குலைக்கும் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் இரட்டை வேடத்தைக் கண்டிக்கின்ற அதேவேளையில்,  துணை டவர் கார்ப்பரேஷன் அமைக்கும் முடிவை திரும்பப் பெறவே முடியாத சூழல் ஏற்பட்டால் அப்போது துணை டவர் கார்ப்பரேஷனின் கணக்கு வழக்குகளை BSNL-ன் நிதிநிலை அறிக்கையிலேயே இணைத்துக் காண்பிக்க வேண்டும் என இச்செயற்குழு BSNL-ஐயும் DOT-யையும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

3.    ஓய்வு வயது 60-லிருந்து 58-ஆகக் குறைப்பு:
அதுபோன்ற எண்ணம் எதுவும் BSNL நிர்வாகத்திற்கு இல்லையென CMD பலமுறை அறிவித்த பிறகும் கூட, ஓய்வு வயது 60-லிருந்து 58-ஆகக் குறைக்கப்படப் போகிறது என்ற அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் பொய்ப்பிரச்சாரம் தொழிலாளர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. சட்டத்தின் படி, DOT-யிலிருந்து BSNL-க்கு வந்த ஊழியர்களின் ஓய்வு வயது 60-ஆகத்தான் இருக்கிறது. எனவே, BSNL-ன் தொழில் அமைதியைக் காக்கும் வகையில், ஓய்வு வயது 60 தான் – அதில் மாற்றமில்லை என்றதொரு தெளிவான அறிக்கையை வெளியிடுமாறு நிர்வாகத்தை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

4.    நான்குகட்டப் பதவியுயர்வு:
முன்பிருந்த பதவியுயர்வு திட்டங்களில் இருந்த உயர் சம்பள விகிதம் போன்ற சலுகைகளை ஒழித்துவிட்டு ஏற்படுத்தப்பட்ட தற்போதுள்ள நான்குகட்டப் பதவியுயர்வு திட்டமானது BSNL தொழிலாளர்களின் நலன்களுக்கு முற்றிலும் எதிராக இருக்கின்ற காரணத்தால், அதை ரத்துசெய்துவிட்டு, முன்பிருந்த உயர் சம்பள விகிதம் போன்ற அதிப்படியான பலன்களைத் தரக்கூடிய வகையில் புதிய பதவியுயர்வு திட்டத்தை அமல்படுத்துமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

5.    சராசரி சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பலன்கள்:
பல்லாண்டுகளாக, JTO-வாக தற்காலிகப் பதவியுயர்வு பெற்று பணியாற்றி வந்த TTA தோழர்களும், JAO-வாக தற்காலிகப் பதவியுயர்வு பெற்று பணியாற்றி வந்த Sr.Accountant மற்றும் Sr.TOA தோழர்களும், தங்களது நிரந்தர ஊதியத்தை விடவும் கூடுதலாக ஊதியம் பெற்று வந்தார்கள். அவ்வாறு அவர்கள் பெற்றுவந்த சராசரி ஊதியத்தின் அடிப்படையில் சட்டரீதியான கூடுதல் ஓய்வூதிய பலன்களை வழங்காமல் தமிழ்மாநில DOT Cell மறுதலிப்பது சரியில்லை. எனவே, ஓய்வுபெற்ற ஊழியர்களின் ஓய்வூதியத்தை திருத்தியமைத்து உரிய நியாயம் வழங்குமாறு தமிழ்மாநில DOT Cell-ன் Pr.CCA-வை  இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

6.    இரண்டாம்கட்ட பதவியுயர்வு (BCR) பெற்றவர்களுக்கு கூடுதல் இன்கிரிமெண்ட்:
கிரேடு-IV (10% BCR) பதவியுயர்வு பெறாத Sr.TOA/TTA-களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் தேதிக்கு முன்பாக கடைசி ஓராண்டுக்கு கிரேடு-IV பதவியுயர்வுக்கு பதிலாக ஒரு கூடுதல் இன்கிரிமெண்ட் வழங்கப்பட்டு, அது ஓய்வூதிய பலன்களை கணக்கிடுவதற்கும் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஆனால், 78.2% IDA-வில் ஊதிய நிர்ணயம் செய்யும்போது அந்த கூடுதல் இன்கிரிமெண்ட்டை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று DOT Cell மறுதலிப்பதால், ஓய்வூதிய மாற்றம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே DOT-யால் வழங்கப்பட்ட பணப்பயன்களை தற்போது DOT Cell மறுதலிப்பது அநியாயமாகும். எனவே, தமிழ்மாநில நிர்வாகமும் கார்ப்பரேட் அலுவலகமும் தலையிட்டு தமிழ்மாநில DOT Cell-ன் Pr.CCA-க்கு உரிய தாக்கீது அனுப்பி, கூடுதல் இன்கிரிமெண்ட்டை கணக்கில் எடுத்துக்கொண்டு ஓய்வூதியத்தை திருத்தியமைத்து  விரைந்து நியாயம் கிடைக்கச் செய்யுமாறு இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

7.    ஒப்பந்த தொழிலாளர்கள்:
BSNL-ல் நிரந்தர வேலைகளைச் செய்வதற்காக ஒப்பந்த தொழிலாளர்கள் காண்ட்ராக்டர் மூலமாக நியமிக்கப் படுகிறார்கள். இந்த நடைமுறை ”ஒப்பந்த தொழிலாளர்கள் வரன்முறைப் படுத்தல் மற்றும் நீக்குதல்” சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி,  ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நியாயமாகச் சேரவேண்டிய சம்பளம் மற்றும் இதர சலுகைகள் முழுமையாகப் போய்ச்சேருவதில்லை. இடைத்தரகர்களைப் போன்று செயல்படும் காண்ட்ராக்டர்களால் ஒப்பந்த தொழிலாளர்கள் சுரண்டப் படுவதைத் தவிர்க்கவும், ஒப்பந்த தொழிலாளர்களே முழுப் பணப்பலன்களையும் அடைவதை உறுதிசெய்யவும், நிர்வாகமே நேரடியாக ஒப்பந்த தொழிலாளர்களை நியமனம் செய்திட வேண்டுமென  இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

Monday, February 19, 2018

4th TN Circle Conference - Madurai - Photos2

சார்பாளர்களின் கூட்டம்
சார்பாளர்களின் ஒரு பகுதி
சார்பாளர்களின் இன்னொரு பகுதி
சார்பாளர்களின் மற்றொரு பகுதி
சார்பாளர்களின் வேறொரு பகுதி
சார்பாளர்களின் இன்னுமோர் பகுதி
தேர்ந்தெடுக்கப் பட்ட புதிய நிர்வாகிகளின் ஒரு பகுதி மேடையில்.
(மாநிலத் தலைவர், மாநிலச் செயலாளர், இணைச் செயலாளர், அமைப்புச் செயலாளர்)
சார்பாளர்கள் உணவருந்தும் காட்சி
வரவேற்புக் குழுவினர்

Friday, February 16, 2018

List of New Office Bearers Elected in 4th TN Circle Conference

NUBSNLW (FNTO)
LIST OF NEWLY ELECTED CIRCLE OFFICE BEARERS

PRESIDENT: COM.D.CHANDRASEKARAN SA(Retd)/VLR  SSA

WORKING PRESIDENT: COM. T.PHILOMIN RAJ  T T/CBT  SSA

VICE PRESIDENT’S: com.R.VENU  STS (Retd)/MA  SSA
                                           ,,   A.M.F.JEYASEELAN  OS/TNJ  SSA
                                           ,,   V.ARUMUGAVEL  T T /TT SSA
                                           ,,   D.RAJENDRAN   AOS/CDL  SSA
                                           ,,   S.NAGENDRABOOPATHI  T T /TR SSA
                                           ,,   E.VENKATESAN   AOS/VLR SSA
                                           ,,  V.PRABAKARAN  JE / TR  SSA

CIRCLE SECRETARY: COM.R.JAYABALAN  OS/ CDL  SSA

Jt.CIRCLE SECRETARY:   Com.  M.NAINAR  SDE(Retd) /TVL  SSA
                                             ,,       G.MUTHUKUMARAN  AO/KKD SSA

Asst. CIRCLE
SECRETARIES:  COM.K.R.PALANICHAMY  TT/(Retd)CBT  SSA
                             ,,      E.KANNAMMAL   JE/PY  SSA
                             ,,      P.GOVINDHAN  OS(Retd)/DPI  SSA
                             ,,      A.MARUDHU MANIKANDAN  JE/MA  SSA
                             ,,      P.RAJKUMAR   JE/NGC  SSA
                             ,,      N.KUMAR   TT/KKD  SSA
                             ,,      CHITRA VARADHARAJAN  OS/ERD  SSA
                             ,,      V.VENKATASUBRAMANIAN  OS(CIVIL)/CGM(O)/CHN
                            ,,       M.RAJARETHINAM  AOS(Retd)/KMB
                             ,,      R.KATHAN   TT/TR  SSA
    
 CIRCLE TREASURER:  COM.  S.PARTHIBAN  OS/CGM(O)/CHN

Asst.TREASURER:    COM.P.K.KESAVAN  OS, CGM(O)/CHN

CIRCLE ORGANAISING SECRETARIES: COM.S.PANDURANGAN OS(Retd)/VGR  SSA
                                                                     ,,      R.SANKARIDEVI  TM(Retd)/VLR SSA
                                                                     ,,      N.DHANDAPANI  AOS/MA  SSA
                                                                     ,,      J.ANANTHAKRISHNAN   OS/SLM  SSA
                                                                     ,,      S.KALIPANDI  TT/KKD/SSA
                                                                     ,,      A.ABDUL NAZEER  TT/TR SSA

4th TN Circle Conference - Madurai - Photos


வரவேற்புக்குழுத் தலைவர் ”மக்கள் மருத்துவர்”  டாக்டர் P.சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளருமான தோழர் S.லிங்கமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றிவைத்தார்.
விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.
 மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம் தோழர் A.S.சையது அலி நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
மேடையில் தலைவர்கள்
வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் P.சரவணன் மாநாட்டைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஆ.ராசா  சிறப்புரையாற்றினார்.

காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் வரவேற்புரையை வாசித்து சால்வை அணிவித்தார்.

4-வது தமிழ் மாநில மாநாடு - மதுரை


FNTO தேசிய BSNL தொழிலாளர் சங்கத்தின் 4-வது தமிழ் மாநில மாநாடு மதுரை, சர்வேயர் காலனி, வசந்த வினோதன் ஹாலில், தோழர் S.ராஜு மற்றும் தோழர்  A.S.சையது அலி நினைவு அரங்கத்தில் பிப்ரவரி 10, 11 தேதிகளில் வெகு விமரிசையாக வெற்றிகரமாக நடைபெற்றது. பிப்ரவரி 9-ம் தேதி மாலை நடைபெற்ற மாநிலச் செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து மறுநாள் 10-ம் தேதி காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் மாநாடு இனிதே தொடங்கியது.

தோழர் K.P.கருப்பையா மற்றும் தோழர் N.நீதிநாதன் நுழைவு வாயிலில் மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் ”மக்கள் மருத்துவர்”  டாக்டர் P.சரவணன் தேசியக் கொடியை ஏற்றிவைக்க, மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளருமான தோழர் S.லிங்கமூர்த்தி சங்கக் கொடியை ஏற்றிவைத்தார். மத்தியச் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் K.வள்ளிநாயகம் தோழர் A.S.சையது அலி நினைவு கல்வெட்டைத் திறந்து வைத்தவுடன் விண்ணதிரும் முழக்கங்கள் எழுப்பப் பட்டன.

மாநிலத் தலைவர் தோழர் M.அப்துல் வஹாப் மாநாட்டு தலைமையேற்க, FNTO-E3 சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் T.தேவராஜன் மற்றும் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் A.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரவேற்புக்குழு பொதுச்செயலாளரும் மதுரை மாவட்டச் செயலாளருமான தோழர் S.முத்துக்குமார் வரவேற்புரையாற்ற, மகளிரணித் தலைவி தோழியர் G.மீனாட்சி அஞ்சலி உரையை வாசித்தார். வரவேற்புக்குழுத் தலைவர் டாக்டர் P.சரவணன் மாநாட்டைத் துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அவர் தன்னுடைய உரையில், அனைவருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்கச் செய்யவேண்டுமென்ற கருத்தை முன்வைத்தார்.

நிர்வாகத்தின் சார்பில் மதுரை மாவட்ட முதன்மைப் பொதுமேலாளர் திருமதி S.E.ராஜம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். சென்னைத் தொலைபேசியின் மாநிலச் செயலாளர் தோழர் S.லிங்கமூர்த்தி, BDPA(India) பொதுச்செயலாளர் தோழர் D.D.மிஸ்திரி, BSNLEC பொதுச்செயலாளர் தோழர் M.இராமசுந்தரம்,  DMTNPLCLR சங்கத் தலைவர் பொன்.இளங்கோவன், சென்னை சொஸைட்டி தலைவர் தோழர் S.வீரராகவன் ஆகியோரும்  NFTE மாநிலச் செயலாளர் தோழர் K.நடராஜன், BSNLWRU மாநிலச் செயலாளர் தோழர் G.P.பாஸ்கரன் உள்ளிட்ட இதர தோழமைச் சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினர்.

மதிய உணவுக்குப் பிறகு, பொருளாய்வுக் குழுவை அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K துவக்கிவைத்தார். அவர் தன்னுடைய உரையில், தொழிலாளர்களுடைய தனிநபர் பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதன் மூலம் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ஆலோசனை வழங்கினார். மத்தியச் சங்கத்தின் இணைப் பொதுச்செயலாளரும் தமிழ் மாநிலச் செயலாளருமான தோழர் D.சந்திரசேகரன் ஆண்டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கையை வாசிக்க, செழுமையான விவாதங்களுக்குப் பிறகு அவற்றை ஏகோபித்த கரகோஷத்தின் மூலம் அவை ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து, சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். பிறகு இரவு உணவுக்காக அவை ஒத்திவைக்கப் பட்டது.

மறுநாள் அவை மீண்டும் கூடியதும், முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம்  பொருளாய்வுக் குழுவைத் துவக்கிவைத்து, FNTO-விலும் BDPA-விலும் தான் இனிமேல் தீவிரமாக செயல்பட உள்ளதாக அறிவித்தார். மாவட்ட, மாநில நிர்வாகிகளின் கருத்துரைகளுக்குப் பிறகு, மதிய உணவு இடைவேளையைத் தொடர்ந்து பொருளாய்வுக் குழு நடைபெற்றது.

மாலையில், பொதுஅரங்கு நிகழ்ச்சியை அகில இந்தியத் தலைவர் தோழர் தாமஸ் ஜான்.K துவக்கிவைத்தார். சிறப்புரையாற்றிய அகில இந்தியப் பொதுச்செயலாளர் தோழர் K.ஜெயப்பிரகாஷ், ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் அடங்கிய மூன்றாவது ஊதிய மாற்றக் குழுவை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலவிரயம் குறித்து கேள்வி எழுப்பியதோடு, இதில் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் அக்கறையின்மையையும் சுட்டிக் காட்டினார். இருந்தபோதும், பொதுநோக்கம் கருதியும் தொழிலாளர்களின் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டும் அவை அறிவித்த போராட்டங்களில் FNTO-வும் கலந்துகொள்ள நேரிட்டதை விளக்கினார்.

தொலைத்தொடர்பு தொழிலாளர்களின் தோழனாக விளங்கிய முன்னாள் தகவல்தொடர்புத்துறை அமைச்சர் திரு ஆ.ராசா பொதுஅரங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவருக்கு வரவேற்புக் குழுவின் சார்பில் ஆளுயர மாலையும், அனைத்து மாவட்டங்களின் சார்பில் சால்வைகளும் அணிவிக்கப் பட்டு, உற்சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. காரைக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் G.முத்துக்குமரன் வரவேற்புரையை வாசிக்க, முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் K.வள்ளிநாயகம் மற்றும் மாநிலச் செயலாளர் தோழர் D.சந்திரசேகரன் ஆகியோர் திரு ஆ.ராசா அமைச்சராக இருந்த காலத்தில் அவரால் தொழிலாளர்களுக்கு கிடைத்த ஏராளமான நன்மைகள் குறித்து சிலாகித்துப்பேசி, அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இறுதியாக, புதிய நிர்வாகிகளாக கீழ்கண்டோர் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
மாநிலத் தலைவர்:                தோழர் D.சந்திரசேகரன், SA Retd., வேலூர்
மாநிலச் செயலாளர்:            தோழர் R.ஜெயபாலன், OS, கடலூர்
மாநிலப் பொருளாளர்:         தோழர் S.பார்த்திபன், OS, CGM(O), சென்னை

மதுரை மாவட்டச்  செயலாளர் தோழர் S.முத்துக்குமார் தலைமையில் தோழர்கள் E.பர்குணன், S.K.தீனதயாளன், K.ஸ்டாலின், A.மருதுமணிகண்டன், P.பிச்சை, A.மனோகரன் உள்ளிட்ட வரவேற்புக் குழுவினர் மாநில மாநாட்டுக்கான விரிவான ஏற்பாடுகளை அருமையாகச் செய்திருந்தனர். அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

புதிய நிர்வாகிகளின் முழுப் பட்டியல் தனியே கொடுக்கப் பட்டுள்ளது. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களின் விபரமும் தனியே கொடுக்கப் பட்டுள்ளது.